புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் (பாஜக) விஜயின் பேச்சு தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசினார். அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பேசுவதற்கு விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக புதுவையில் மத்திய அரசை குறை சொல்லி பேசியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தெந்த வளர்ச்சியில் துணை நிற்கவில்லை என்பதை அவர் சொல்ல வேண்டும். பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடாது. காரைக்கால், ஏனாம் போன்ற பகுதிகளில் எல்லாம் அவர் சென்று பார்த்தாரா? அவை எந்த அளவுக்கு வளராமல் இருக்கிறதென்று அவருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. அவர் அரசியலுக்கு புதிது. யாரோ சொல்லிக்கொடுத்ததைத்தான் அவர் பேசுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுவையில் அமைந்த பிறகு மத்திய அரசு எவ்வளவோ நல்ல திட்டங்களை புதுவை மாநிலத்திற்குக் கொடுத்திருக்கிறது.
ரேஷன் கடை இல்லை எனச் சொல்கிறார். ரேஷன் கடைகள் திறந்து மாதம் மாதம் விலையில்லா அரிசியை மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். முதலமைச்சராக ரங்கசாமிதானே இருக்கிறார். அவரையும்தானே விஜய் குறை சொல்கிறார். ரேஷன் கடை என்பது மாநில அரசினுடையதா? மத்திய அரசினுடையதா? விஜயின் பேச்சு என்பது என் ஆர் காங்கிரஸை அவரது கொண்டுவருவதற்கான பேச்சுதான்.
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் ஒன்றிய அரசு புதுச்சேரியைக் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா? கண்டுகொள்ளவில்லை. அவர்கள், இங்கு வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை, இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. பலமுறை சட்டசபையில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஒரு தீர்மானம் போட்டார்கள். அது மாநில அந்தஸ்து வேண்டுமென்று கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பும் 16ஆவது தீர்மானம்.
புதுச்சேரியில், காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள், பல தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக எதையுமே செய்யவில்லை. இங்கு ஒரு ஐடி கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றவில்லை. ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமித்து 200 நாள் ஆகிவிட்டது இன்னும் அவருக்கு இலாகா ஒதுக்கவில்லை.
காரைக்கால், ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் எந்த முன்னேற்றம் இல்லை என மக்கள் சொல்கிறார்கள். சுற்றுலா தளமாக இருக்கும் புதுச்சேரியில் கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்தும் வசதி இல்லை. காரைக்கால் மொத்தமாக கைவிடப்பட்டதாகத் தான் உள்ளது. புதுச்சேரி கடலூர் மார்க்கமான ரயில்வே பாதை வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும். திமுகவை நம்பாதீர்கள்.. உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் அவர்களது வேலையே. புதுச்சேரி அரசுக்கும் அதன் மக்கள் நலத்திட்டங்களுக்கும் நாம் துணை நிற்க வேண்டும்.
அரசியல் என்று வந்துவிட்டால் முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். 1977 எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முன், முதலில் 1974ல் புதுவையில்தான் ஆட்சி அமைத்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை விட்டுவிடக் கூடாது என முன்பே நினைவு படுத்தியது புதுச்சேரி மக்கள் தான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மால் மறக்க முடியுமா? தமிழ்நாடு மக்களைப்போலவே புதுவை மக்களும் என்னை 30 வருடமாக தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமில்லாமல் புதுவை மக்களுக்கும் விஜய் குரல் கொடுப்பான். புதுவை அரசு திமுக அரசு போல் இல்லை. ஏன் என்றால் வேற அரசியல் கட்சி நடத்தும் நிகழ்வு என்றாலும் அந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் இந்த அரசு பாராபட்சம் காட்டவில்லை. புதுவை முதல்வருக்கு மனப்பூர்வ நன்றி. இதை பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. வரும் தேர்தலில் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதை தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா கர்நாடகா மட்டுமல்ல.. உலகின் எந்த மூலையில் நம் வகையறா இருந்தாலும் அவர்கள் எல்லாம் நம் உறவுதான்,. நம் உயிர்தான். புதுச்சேரி என்றதும் மணக்குளம் விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா என்று எல்லோரும் ஞாபகத்திற்கு வருவார்கள். மகாகவி பாரதி இருந்த மண், பாவேந்தர் பாரதி பிறந்த மண் என சிறப்புகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.
தவெக தலைவர் விஜய் பேசுகையில், “ஒன்றிய அரசுதான் தமிழ்நாடு தனிமாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று இருப்பார்கள். நமக்கெல்லாம் அப்படி இல்லை, நாம் வேறு வேறு கிடையாது. நாம் எல்லாம் ஒன்றுதான். நாம் எல்லாம் சொந்தம்தான்,. வேறு வேறு வீட்டில் வேறு வேறு மாநிலத்தில் இருப்பதால் நாம் சொந்தம் இல்லை என்று ஆகிவிடுமா? ஒருவரை ஒருவர் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்துவிட்டால் போதும் வேறு எதுவும் வேண்டாம்.
தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “இங்கிருக்கும் காவல்துறைக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று சொல்கிறீர்களே சிஎம் சார் (மு.க.ஸ்டாலின்) கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்,. இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது,. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படிப்பட்ட பாதுகாப்பை தமிழ்நாட்டில் தவெக தலைவர் பரப்புரையில் கொடுத்ததே கிடையாது. சி எம் சார் உங்கள் அரசியலை தூக்கிபோட்டுவிட்டு தேர்தலில் மோதுங்கள். தவெகவின் பிரச்சார பயணம் இன்றிலிருந்து துவங்கிவிட்டது” என்றார்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறுகையில், “தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 2026ல் வருவார். அதேபோல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையும். காவல்துறைக்கு நன்றி. அதிகமாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். 72 நாட்கள் கழித்து பொதுக்கூட்டத்திற்கு தலைவர் வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் நம்மை எங்கேயும் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தலைவர் சொன்னதுபோல்தான். காற்றை மறைக்க முடியுமா?” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைப் பயணமும் பேசுபொருளாகியிருக்கிறது.
இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிலையில் புதுச்சேரியை சார்ந்தவர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கியூ ஆர் கோடு அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர். அனுமதி அட்டை இல்லாதவர்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்ததன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும், காவலர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. காவலர்களும் அதிகமான கெடுபிடிகளை விதித்ததால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதையும் பார்வையிட்டார். அப்போது அடையாள அட்டை வைத்திருப்பவர்களை வேகமாக உள்ளே அனுமதிக்குமாறு காவல்துறையினரை கேட்டுக்கொண்டார்.