2026-ம் ஆண்டுக்கான தமிழக அரசியல் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த சூழலில் தவெக நிலைப்பாடு குறித்தும், மற்ற கட்சிகள் குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் புதிய தலைமுறை உடன் பேசியுள்ளார்.
புதிய தலைமுறை உடன் பேசியிருக்கும் அருண்ராஜ், “1977ஆம் ஆண்டு தமிழகத்தில் நான்கு முனை போட்டி இருந்தது.. அப்போது எம்ஜிஆர் ஆட்சியை அமைத்தார் அதே போன்று தான் விஜய் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வருவார்.
நாங்கள் தான் பாஜகவை கொள்கை எதிரி என்று தெரிவித்து விட்டோம், பிறகும் ஏன் எங்களை கூட்டணிக்கு தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அழைக்கிறார்கள் எங்களை எதிரி என்று அறிவிக்க வேண்டியது தானே..
2016-ல் கருணாநிதி ஜெயலலிதா ஆகியோர் உயிரோடு இருந்தார்கள், அதனால் மக்கள் நல கூட்டணி மூன்றாவது அணியாக இருந்து, ஆளுங்கட்சி ஆட்சி அமைக்க உதவியாக இருந்தது. ஆனால் தற்போது அது போன்று இல்லை நாங்கள் தான் ஆட்சியை அமைப்போம்..
முதலமைச்சர் வொர்க் ப்ரம் ஹோம் போன்று work from போனாக வேலை செய்து கொண்டிருக்கிறார்..
திமுகவின் உறுப்பினர்கள் குறைந்து கொண்டு செல்வதால் தான் தற்போது இளைஞர்களை ஈர்ப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்..
தமிழகத்தின் ஒரே ஆளுமை மிக்க தலைவர் விஜய்..” என்று பேசியுள்ளார்.