தமிழ்நாடு

தூத்துக்குடி: ரவுடி என்கவுன்ட்டர் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

EllusamyKarthik

தூத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தை மனித உரிமை அமைப்புகள் கேட்டுக் கொண்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில் தாமாக முன் வந்து ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.