தமிழ்நாடு

மதுரை: நடந்து சென்றவர்கள் மீது மோதிய சரக்கு வாகனம்: இருவர் உயிரிழப்பு

kaleelrahman

மதுரையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் கடந்த 10-ஆம் தேதி பிற்பகல் அதிவேகமாக வந்த சரக்கு வேன் சாலையோரம் நடந்து சென்ற, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த முதியவர் சுப்புராம் (75) மற்றும் அசோகன் ஆகியோர் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர், சரக்கு வாகன ஓட்டுநர் கார்த்திக் என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமாக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது,

இந்நிலையில், விபத்து நடைபெற்றபோது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.