தமிழ்நாடு

திருச்சி: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் பலி

webteam

திருச்சி மாநகராட்சியின் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து சாகர் பானு என்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சாகர் பானுவின் குடும்பத்தினருக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழப்புக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.