தமிழ்நாடு

கோவை மாணவி மரணத்துக்கு காரணமான ஆசிரியரை தூக்கிலிடவேண்டும் - திருச்சி மாணவர்கள் போராட்டம்

Sinekadhara

கோவை மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியரை தூக்கிலிட வலியுறுத்தி, திருச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவையில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி கடந்த 11ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும், அவர்களது மரணத்துக்கு காரணமானவர்களையும், கோவையில் பள்ளி மாணவியின் மரணத்துக்கு காரணமான ஆசிரியரையும் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.