தமிழ்நாடு

கொடைக்கானல்: கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கை - சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

JustinDurai
கொடைக்கானலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் கொடைக்கானலுக்கு ஏராளமான பயணிகள் குவிந்து வந்தனர். இதனால், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது. சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.