முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடு பயணத்தை இன்று தொடங்குகிறார்.
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப் பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
தென்காசி எம்பி தனுஷ் குமாரின் நெருங்கிய உறவினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 16ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் வழக்கில் தன்னை கைது செய்து அவமதிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.