தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கோப்புப்படம்
தமிழ்நாடு

காத்திருந்த போட்டித் தேர்வர்களுக்கு கிடைத்த Good News... அட்டவணையை வெளியிட்டது TNPSC

webteam

நடப்பாண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சூழலில், நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி அதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TNPSC Annual planner

அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதே சமயம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

இதே போன்று பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.