அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன் PT
தமிழ்நாடு

எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி; அடுத்த சிகிச்சை எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Jayashree A

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது செந்தில் பாலாஜியின் உடல்நலம் குறித்து விளக்கம் அளித்தார்.

"நேற்றிரவு முதல் செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்று வருகிறார். இரத்த நாள அடைப்பு இருப்பதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு Blood thinner எனப்படும் ரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை கொடுத்து வந்தார்கள். இந்த மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் உடனடியாக Bypass அறுவை சிகிச்சை செய்ய முடியாது.

எனவே நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட உடன் Blood thinner மருந்துகளை நிறுத்தியிருக்கிறோம் என அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துகளை நிறுத்தி இன்னும் 3-4 நாட்கள் பார்த்து விட்டு அறுவை சிகிச்சை மேற்க்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் துணைவியார் கேட்டுக் கொண்டதன் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார்கள். தனிநபர் விருப்பங்களில் தலையிடுவது முறையாகாது.

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் வேண்டுமானால் பரிசோத்துக்கொள்ளட்டும் என நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுவரை எம்ய்ஸ் மருத்துவர்கள் யாரும் வரவில்லை" என்றார்.