தமிழ்நாடு

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Rasus

பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது.

இதற்காக கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் மானிய விலையில் ஸ்கூட்டர்  பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 10ம் தேதி வரை மானிய விலை ஸ்கூட்டர் பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம்.