தமிழ்நாடு

“தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சி பாதித்தவை”- அரசு அரசாணை வெளியீடு

“தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சி பாதித்தவை”- அரசு அரசாணை வெளியீடு

webteam

சென்னை உள்பட தமிழகத்தின் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேரிடர் மற்றும் வருவாய் துறை சார்பில் மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டில் ‌சராசரி மழை அளவைவிட 14 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்து அதிக மழைப்பொழிவை தரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், 24 விழுக்காடு குறைவாக மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர், சேலம், வேலூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 17 மாவட்டங்களையும், கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 24 வட்டாரங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.