ஆர்.என்.ரவி முகநூல்
தமிழ்நாடு

4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார் .

கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

அனுப்பப்பட்ட 18 மசோதாக்களில் 14 மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது . சமீபத்தில் மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஆளுநர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.