மருத்துவப் படிப்பு சேர்க்கை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் கொள்கை முடிவில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
முன்னதாக, எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.