தமிழ்நாடு

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை - தமிழக அரசு தகவல்

webteam

மதுரையில் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் 41 பேர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையில் 2019-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக புகார் எழுந்தது. போலி ஆவணங்கள் மூலம் 28 பாஸ்போர்ட்டுகள் பெற்றது தெரியவந்த நிலையில், மதுரை நகர க்யூ பிரிவில் 7 பேர் மீது வழக்குகள் பதிந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அலுவலர்கள், பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் உள்பட 41 பேர் குற்றம் புரிந்துள்ளதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டு விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.