தமிழக அரசின் ஆளுங்கட்சியான திமுக அரசு, தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாக மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை முக்கியமானதாக அறிவித்திருந்தது.
அது சார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஆதி திராவிட மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு படி, ”ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும், 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும்,
வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும்,
வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும்,
ரூ.48,95,00,000/-ஐ சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write
off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.