தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

உயர்நீதிமன்றத்தில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

jagadeesh

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு, 44 அரசு வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிடுள்ளது.

தலைமைச் செயலாளர் வெ.இறையண்பு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும் வரை இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே, 26 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

தற்போது புதிதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 பேரும், மதுரை கிளையில் 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திமுக வழக்கறிஞர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.