தமிழ்நாடு

தமிழர்களின் வலையை அறுத்து இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

rajakannan

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றதாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டும் சம்பவங்கள் அவ்வவ்போது நடைபெற்று வருகின்றன. அதேபோல், இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையேயும் மீன்பிடிப்பதில் சிக்கல்களும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், கோடியக்கரையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்றிரவு கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடிக்க வலை விரித்திருந்தபோது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் வலைகளை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். இலங்கை மீனவர்களின் அட்டூழியத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.