தமிழ்நாடு

தனுஷ்கோடி மன்னார் இடையே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

webteam

தனுஷ்கோடி மன்னார் இடையே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மீனவர் விசுவாசம் என்பவர் படகில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் தனுஷ்கோடி மன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாகவும் கூறி, மீனவர்கள் எட்டு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.