தமிழ்நாடு

டெல்லியில் தமிழக விவசாயிகள் 6ஆவது நாளாகப் போராட்டம்

webteam

டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் சிகிச்சை பெற்று திரும்பினர். விவசாயிகளுக்கு டெல்லி வாழ் தமிழர்கள் உணவு உள்ளிட்ட வசதிகளை அளித்து வருகின்றனர். மத்திய அமைச்சர்களை சந்திக்க வழிவகை செய்வதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொலைபேசி வழியாக விவசாயிகளுக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 100 நாட்களுக்கு தொடர்ந்து நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.