தவெக - 72
அதிமுக - 52
திமுக - 37
நாதக - 0
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், சென்னையில் பெரும்பாலான இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
தவெக - 60
அதிமுக - 43
திமுக - 34
நாதக - 1
விருதாச்சலம் தொகுதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை பெற்றுள்ளார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை.
தவெக - 50
அதிமுக - 37
திமுக - 31
நாதக - 1
தவெக - 50
அதிமுக - 37
திமுக - 31
நாதக - 1
காரைக்குடி தொகுதியில் திமுக தலைம ஒருங்கிணைபாளர் சீமான் பின்னடைவு. தவெக வேட்பாளர் டி.கே. பிரபு முன்னிலை.
தவெக - 38
அதிமுக - 30
திமுக - 28
நாதக - 1
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தவெக 35 இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. அதிமுக 27 தொகுதிகள் முன்னிலையில் 2வது இடத்திலும், திமுக 25 தொகுதிகள் முன்னிலையில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா முன்னிலை.
திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் முன்னைலை.
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் முன்னிலை.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் முன்னிலை.
தி நகர் தொகுதியில் என். ஆனந்த் முன்னிலை
திருச்சி தொகுதியில் தவெக தலைவர் விஜய் தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார்.
காட்பாடி தொகுதியில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பின்னடைவு
திருப்பூர் தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் பாலமுருகன் 2020 வாக்குகள் பெற்று முன்லை
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு. 295 வாக்குகள் பெற்று தவெக முன்னிலை.
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பின்னடைவு.
திருவள்ளூர் செவ்வாய்ப்பேட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக முகவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெகவின் செங்கோட்டையன் முன்னிலை
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா பின்னடைவு.
தபால வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் முன்னிலை.
திருச்செங்கோடு தொகுதியில், தவெக வேட்பாளர் அருண்ராஜ் முன்னிலை பெற்றுள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 215 வாக்குகள் பெற்று முன்னிலை; தவெக வேட்பாளர் சபரிநாதன் 211 வாக்குகள் பெற்று பின்னடைவு
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி 872 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
பாளையங்கோட்டை தொகுதியில் தவெக வேட்பாளர் மரியா ஜான் 104 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திரு.வி.க நகர் அதிமுக சார்பில் போட்டியிட்டிருக்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பின்னடைவு.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் 206 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், ஆவடி நாசர் முன்னிலை பெற்றுள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதியில், கே.என். நேரு பின்னடைவு. தவெக வேட்பாளர் முன்னிலை.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், தவெக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர ராஜா முன்னிலை பெற்றுள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில், பெரம்பூரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் விஜய் திருச்சி கிழக்கில் பின்னடைவு.
தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், 11 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களிலும் தவெக 1 இடத்திலும் முன்னிலை.
சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்ரமணியன் முன்னிலை.
மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக தபால் வாக்குகள் அதிவேகமாக எண்ணப்பட்டு வருகின்றன.
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 75 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அதன்படி, முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
தமிழ்நாடே பெரும் எதிர்பார்த்து காத்திருந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பல மையங்களில் திறக்கப்படுகின்றன. தொடர்ந்து, வாக்கு எண்ணும் இடத்துக்கும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று காலை தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேயான இருமுனைப் போட்டியே இருந்துவரும் நிலையில், நடிகர் விஜயின் வருகையால் இந்த முறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போரைக் கண்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, விஜய் ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இளைஞர்களின் செல்வாக்கும் இந்தத் தேர்தல்களில் விஜயை ஒரு கணிக்க முடியாத சக்தியாக மாற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட உள்ளன. அதன்படி, காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன.த்