தமிழ்நாடு

“சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்?” - துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் விளக்கம்

EllusamyKarthik

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அண்மையில் சிறையிலிருந்து தண்டனை காலத்தை முடித்து விடுதையானார். விடுதலை ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றினால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பூரண குணமடைய வேண்டும் என்று தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது. இந்த சூழலில் “சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்தது ஏன்?” என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார் ஜெயபிரதீப்.

“மனிதாபிமான அடிப்படையில் சசிகலாவிற்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தேன்” என அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.