தமிழ்நாடு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

Rasus

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 மணியளில் சந்திக்க உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பரிசோதனைக்குப் பின் இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.