தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றிக் கடிதம்

webteam

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசு மற்றும் தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்கு பிரதமர் மோடி ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்ததாகவும், ‌தமிழகத்தின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநிறுத்தும் வகையில் பிரதமர் செயல்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.