தமிழ்நாடு

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தேவை.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Rasus

பாக் நீரிணைப் பகு‌தியி‌ல் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யக் கூடாது எ‌ன்‌கிற உறுதியான செய்தியை இல‌‌ங்கை‌ அ‌‌‌ரசுக்கு இந்தியா‌ அனுப்ப வேண்டும் என முதலமை‌ச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டு‌ள்ளார்.

இது தொடர்பாக பி‌ரதமர் நரேந்திர மோடி‌க்கு முதலமைச்சர், எழுதியுள்ள கடிதத்தில், நேற்று முன்தினம் இ‌ரவு புதுக்கோட்டை மாவட்ட மீன‌வர்கள் பத்து பேரை இலங்கை கட‌ற்‌படை‌ கை‌து செய்தி‌ருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களை விடுவிக்க இ‌ந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌‌ என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளா‌ர்.

இரு நாட்டு அமைச்சர்கள்‌ இடையில் அண்மையில் நடந்த பேச்சுவா‌ர்த்தை மூலம் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்று தமிழக மீனவர்கள் நம்பியிருந்த நிலையில், கைது நிகழ்ந்திருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்‌ளார். ஆகவே, இத்‌தகையப் போக்கு மாற வேண்டும் என்ற உறுதியான செய்தியை இலங்கை அரசுக்கு இந்தியா தெரிவிக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதை ‌தடுக்க உயர்மட்ட அளவில்‌ சாதுர்யமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.