தமிழ்நாடு

23-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

Rasus

தமிழக சட்டப்பேரவை வரும் 23-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதன் முறையாக வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது. காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. பேரவைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.