தமிழ்நாடு

திருப்பூர்: சாலை விபத்தில் ஒரே ஸ்கூட்டரில் சென்ற 4 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் பைபாஸ் பகுதியில் சாலையில் நின்றிருந்த லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஒரே ஸ்கூட்டரில் சென்ற இளைஞர்கள் பாலமுருகன், குட்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு பாலமுருகன் மற்றும் ஆனந்த ஆகியோர் சிகிச்சை பலனின்றி அவிநாசி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.