தமிழ்நாடு

திருப்பத்தூர்: கடும் பனிமூட்டம் காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் வாகனங்கள்

webteam

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடும் பனிமூட்டம் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ரயில்கள் மற்றும் வாகனங்கள் செல்கின்றன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் கடந்து சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அதிகாலை முதல் வாணியம்பாடியில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால், தேசிய நெடுஞ்சாலையில் லாரி, கார், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி செல்கின்றனர். பனிமூட்டத்தால் ரயில்களும் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி செல்கின்றன.