தமிழ்நாடு

சசிகலாவை சந்தித்தது 3 பேர்தானாம்!

சசிகலாவை சந்தித்தது 3 பேர்தானாம்!

webteam

கடந்த சில வாரங்களாக சசிகலாவை சிறையில் சந்திப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. கடந்த 15-ம் தேதியில் இருந்து அவரை வெறும் 3 பேர் மட்டுமே சந்தித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் சசிகலாவின் வக்கீல்கள் தவிர்த்து 19 பேர் அவரை சிறையில் சந்தித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக மூன்று பேர் மட்டுமே அவரை சந்தித்து பேசியுள்ளனர், அதில் ஒருவர் சென்னையை சேர்ந்த டாக்டர் என தெரியவந்துள்ளது.

இளவரசி உடல்நலக் குறைவு காரணமாக சிறை மருத்துவமனையில் அதிக நேரம் இருக்கிறார். எனவே சசிகலா சிறையில் தனியாகவே இருக்கிறார் என சிறை தகவல்கள் கூறியுள்ளன.