தமிழ்நாடு

ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைத்த தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்

JustinDurai

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக வ.உ.சி. துறைமுகம் கொண்டு வரப்பட்டது. அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்த காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன.

எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட 6 காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட12 இறகுகளும் ஏற்றப்பட்டன. தொடர்ந்து கப்பல் ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றது.