தமிழ்நாடு

தூத்துக்குடி: கொற்கை அகழாய்வில் கண்டறியப்பட்ட ரோம் நாட்டு எண்ணெய் ஜாடி ஓடுகள்

kaleelrahman

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில், ரோம் நாட்டின் எண்ணெய் ஜாடி ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரோம் நகரத்துடன் இருந்த வாணிபத் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில், ரோம் நாட்டில் எண்ணெய் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ஜாடியின் ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளுடன் கொற்கை வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.