தமிழ்நாடு

தூத்துக்குடி: தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

kaleelrahman

தூத்துக்குடியில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த துரைமுருகன் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தூத்துக்குடியில் 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை பிடிக்கச் சென்றபோது காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் துரைமுருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது 18 வழக்குகள் உள்ளது. அதில், 7 கொலை வழக்குகளும் அடங்கும்.

குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த துரைமுருகனை பிடிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளரை தாக்க முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.