தமிழ்நாடு

முனைவர் தொ.பரமசிவன் காலமானார்

முனைவர் தொ.பரமசிவன் காலமானார்

Rasus

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன்(70) உடல்நலக் குறைவால் காலமானார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.

தமிழில் இயங்கிவந்த முக்கியமான பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர்களில் ஒருவராக தொ.பரமசிவன் திகழ்ந்து வந்தார். அத்துடன் தமிழ் பண்பாட்டின் வேர்களை தனது நூல்கள் மூலமும் எடுத்துரைத்தும் வந்தார். அழகர் கோயில், அறியப்படாத தமிழகம் போன்ற நூல்கள் தொ.பரமசிவத்தின் முக்கிய படைப்புகளாகும்.