தமிழ்நாடு

அரசியலில் நாங்கள் ஜீரோ என்றனர்; இனி நாங்கள்தான் ஹீரோ - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

webteam

அரசியலில் எங்களை ஜீரோ என விமர்சித்தனர்; ஆனால் இனி நாங்கள்தான் ஹீரோ என்று ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு வழக்கில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது குறித்து பேசியிருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவை வரவேற்கிறோம். கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றிய இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்யும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அரசியலில் எங்களை ஜீரோ என விமர்சித்தனர்; ஆனால் இனி நாங்கள் தான் ஹீரோ என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.