தமிழ்நாடு

சில தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என்ற தகவலில் உண்மை இல்லை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

sharpana

நாளை நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக பரவி வந்த நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ”234 தொகுதிகளுக்கும் நாளை திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும். அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உட்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.