சென்னை உயர்நீதிமன்றம், தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. மனுதாரர் சபை கொடியை தவெக பயன்படுத்தியதாக கூற முடியாது எனவும், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தவெக கொடி தங்களது சபை கொடி போன்று உள்ளதாகவும், இதனால் அதில் சிவப்பு, மஞ்சள் நிறத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இரு கொடிகளை ஒப்பிட்டால், தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் எனக் கூற முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், எங்கள் வணிகச் சின்னமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியைப் பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதியிடம் மனுதரார் கூறியதாவது, ” "வணிகச் சின்னமாகப் பதியப்பட்ட தங்கள் சபை கொடியைப் பயன்படுத்துவது வணிகச் சின்னச் சட்டத்தையும், பதிப்புரிமைச் சட்டத்தையும் மீறிய செயல். கொடி ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால் சிவப்பு, மஞ்சள், நிறத்தில் கொடியைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தவெக சார்பில் வாதம் செய்யப்பட்டபோது கூறியதாவது, மனுதாரர் சபையோ, தவெகவோ எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என்பதால் கொடி மீது உரிமை முடியாது எனவும் மனுதாரர் கொடியை ஒப்பிடும் போது தவெக கொடி முற்றிலும் வேறுபாடானது. எங்கள் கொடியில் மஞ்சள் கலரில் யானைகள், வாகை மலர்கள், 28 நட்சத்திரங்கள் உள்ளன என்பதால் மக்களிடம் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு கொடியையும் ஒப்பிடும் போது மனுதாரர் சபை கொடியைத் தவெக பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது. தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவுக்குத் தடைவிதிக்க முடியாது என தெரிவித்து, இடைக்கால தடை கோரியவ்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.