தமிழ்நாடு

தை தெப்பத் திருவிழா: வெள்ளி ரிஷப வாகனங்களில் உலா வந்த மதுரை மீனாட்சியம்மன்

kaleelrahman

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத் திருவிழாவையொட்டி ரிஷப வாகனத்தில் சாமி, அம்மன் உலா வந்து அருள்பாலித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தை தெப்பத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று வெள்ளி ரிஷப வாகனங்களில் மீனாட்சி அம்மன் தனியாகவும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனையுடன் ஆடி வீதியில் சுவாமியும் அம்மனும் வலம் வந்தனர்.