தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 161 பேரில், 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தலைநகரில் கடந்த 6 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருக்கின்றது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சுமார் 50% என்ற அளவிலிருந்தாலும், தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறையாதது சென்னை மக்களுக்குக் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாவட்டங்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கச் சென்னையில் தொற்று அதிகரித்துள்ளது.