தமிழ்நாடு

ஒரு நிமிடத்தில் 26 நிரலம்ப பூரண சக்கராசனம் செய்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவன்

kaleelrahman

திருவள்ளூரில் பள்ளி மாணவன் ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூரண சக்கராசனம் செய்து முந்தைய சாதனைகளை முறியடித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை சேர்ந்தவர் பத்திரிகையாளர் ரங்கபாஷ்யம். இவரது மகன் யுவன் (10) தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இணையதளம் மூலம் நடைபெற்ற யோகாசன போட்டியில் கலந்து கொண்டு ஒரு நிமிடத்தில் 26 முறை நிரலம்ப பூரண சக்கராசனம் செய்து, ஏற்கனவே மாணவி ஒருவர் ஒரு நிமிடத்தில் 21 முறை செய்த சாதனையை முறியடித்தார்.

இதையடுத்து மாணவன் ஆர்.ஜி.யுவன் புதிய சாதனையை நிகழ்த்தி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட், மற்றும் ஆவ்சம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மாணவனை கௌரவிக்கும் வகையில் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.