தமிழ்நாடு

வாணவேடிக்கைகளுடன் கொடி இறக்கம்...நிறைவுபெற்றது உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா

webteam

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. வண்ணமிகு வானவேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் இறக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் 466 -வது கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 1-ஆம் தேதி பீர் அமரவைத்தல், 2-ந்தேதி சந்தனகூடு ஊர்வலம், 3-ந்தேதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிலையில் 14 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான நேற்று இரவு தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவில் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. வண்ணமிகு வான வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க ஒரே நேரத்தில் தர்காவின் 5 மினாராக்களிலும் கொடிகள் இறக்கப்பட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.