வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் 18ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். நாளை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.