தமிழ்நாடு

தர்மபுரி : அரிசி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

EllusamyKarthik

ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி தீப்பிடித்து எரிந்ததில் 30 டன் அரிசி தீக்கிரையாகி உள்ளது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியில் பயணம் செய்த ஓட்டுநர் மற்றும் மாற்று ஓட்டுநர் உயிர் தப்பியுள்ளனர்.  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனை உடைத்துக் கொண்டு எதிர்புற சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சேலம் - தர்மபுரி சாலையில் நடந்துள்ளது. சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  

காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்த இருபுறமும் சாலையில் போக்குவரத்தை நிறுத்தியது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதற்கு தீர்வு காண வேண்டும் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.