தமிழ்நாடு

முடித் திருத்தும் நிலையங்களைத் திறக்க மாநில அரசுக்கு அதிகாரம் - மத்திய அரசு  

webteam
சிவப்பு மண்டலங்களிலும் உள்ள முடித்திருந்த நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களைத் திறப்பதற்கான முடிவை மாநில அரசே எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் இன்று இரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் இன்று மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்தன. 
 
இந்நிலையில் நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அத்துடன் நாடு முழுவதும் பச்சை மண்டலம், ஆரஞ்சு மண்டலம் மற்றும் சிகப்பு மண்டலத்திற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாநில  மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலங்களிலும் முடித் திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்களைத் திறப்பதற்கான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.