தமிழ்நாடு

தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் !

தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் !

webteam

சென்னையில் சொத்துப் பிரச்னையால் பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதாக, ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் வசித்து வந்தவர் துளசி ராமன். இவர் அதே பகுதியில் உள்ள தனது சொந்தமான வீட்டில் 3 மகன்களுடன் வசித்து வந்தார். 2 மாடிகள் கொண்ட வீட்டில் இரண்டாவது தளத்தில் துளசி ராமனின் கடைசி மகன் நரசிம்மன் என்பவர் 2-வது போஷன் கொண்ட ஒரு வீட்டில் வசித்தார். மற்றொரு போஷனில் துளசிராமன் மனைவியுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் துளசிராமனுக்கும், கடைசி மகன் நரசிம்மனுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தாக தெரிகிறது. தன்னுடைய பெயருக்கு தங்கியிருக்கும் வீடு எழுதி வைக்கவில்லை என அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று துளசிராமனுக்கும் தனது மகன் நரசிம்மனுக்கும் மீண்டும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் நரசிம்மன் வீட்டிலிருந்து துணியை அப்பா துளசிராமனின் உடலில் சுற்றி, பெட்ரோல் ஊற்றி தீயை வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

 சிறிது நேரத்தில் துளசிராமனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து துளசிராமனை காப்பாற்றினர். உடனடியாக அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி துளசிராமன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மனை தேடிவந்தனர். இதையடுத்து அவரே ராஜமங்கலம் போலீசில் சரண் அடைந்தார். பிறகு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக தந்தையை மகனே எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.