தமிழ்நாடு

மகனுடன் பிரச்சனை - வயதான தம்பதியர் தற்கொலை

மகனுடன் பிரச்சனை - வயதான தம்பதியர் தற்கொலை

webteam

காஞ்சிபுரம் அருகே மகனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 

காஞ்சிபுரம் அருகே கிதிரிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தாண்டவராயன் (வயது 75) இவரது மனைவி கண்ணம்மா(வயது 65). இவர்கள் இருவரும் தங்களது இளைய மகன் பெருமாளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மூத்த மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக அவர்கள் மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சல் அதிகமானதை தொடர்ந்து தாண்டவராயனும் அவரது மனைவி கண்ணம்மாவும் வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீஸார் கணவன் மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.