தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் செங்கோட்டையன் சமாதான பேச்சுவார்த்தை?

JustinDurai

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை வெடித்துள்ள நிலையில், இரு தலைவர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவருடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு சென்றார். அப்போது இருவரும் சுமார் இருபது நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது.

இதனையடுத்து செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி  பழனிசாமி வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்துகிறார். செங்கோட்டையன் சமாதான முறையில் ஈடுபடுவதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாம்: `இபிஎஸ் ஆதரவாளரா என கேட்டு தாக்கினர்”- அதிமுக நிர்வாகிகளிடையே முற்றும் தலைமை யுத்தம்