நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி.. அவரது மனைவி ஜெயலெட்சுமி. இருவரும் வழக்கறிஞர்கள் ஆவர். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ளனர். இரண்டாவது மகள் கனிமொழி, நாமக்கல் கீரீன் கார்டனில் 12 ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில் தஞ்சாவூரில் தாமரை இன்டர் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மாணவி கனிமொழி துளாரங்குறிச்சியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)