தமிழ்நாடு

சலூன் கடைகள் இன்றும் நாளையும் இயங்கலாம்

JustinDurai

தமிழகத்தில் முழு ஊரடங்கு மே 10 முதல் 24 ஆம் தேதி வரை அமல்படுப்பட இருக்கும் நிலையில், சலூன் கடைகள் இன்றும் நாளையும் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சலூன் கடைகளும் இன்றும் நாளையும் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.