தமிழ்நாடு

போலீசுக்கு போனா, அவ்ளோதான்: கொள்ளை அடித்துவிட்டு மிரட்டிய கும்பல்!

webteam

சேலம், கிச்சிபாளையம் பகுதியில் இரும்பு வியாபாரி ஒருவர் வீட்டிலிருந்து 720 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் இருந்தவர்கள் திருப்பதி சென்றிருப்பதை அறிந்த திருடர்கள், வீட்டின் ஜன்னலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வீடு திரும்பிய இரும்பு வியாபாரி மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர், கதவு உடைந்திருப்பது கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது, விலையுயர்ந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் குடும்பத்தையே கொன்றுவிடுவதாக மிரட்டல் கடிதத்தையும் கொள்ளையர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரும்புக் கடையில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.