தமிழ்நாடு

50 அடி ஆழம்... 15 மணி நேரப் போராட்டம் - கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யானை

Sinekadhara

தருமபுரி பஞ்சப்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த யானை 15 மணிநேர போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் உணவுத்தேடி ஊருக்குள் நுழைந்த போது விவசாயக்கிணற்றில் ஒரு பெண்யானை தவறி விழுந்தது.

50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த யானைக்கு முதலில் மயக்க ஊசி செலுத்தி யானையை மீட்க திட்டமிடப்பட்டது. யானைக்கு தேவையான உணவு வழங்கப்பட்டு, கிணற்றிலிருந்த நீரும் வெளியேற்றப்பட்டது.

கிரேன் வர தாமதமானதால் இரண்டாவது முறை மயக்க ஊசி செலுத்திப்பட்டது. தற்போது பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிரேன் உதவியுடன் யானையை வனத்துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.